தமிழ் முனிவன் தாள் பணிந்து !
சொல் புதிது
தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள்
என்றுண ராத இயல்பினளாம் எங்கள் தாய் ( பாரதியார் )
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! (பாரதிதாசன் )
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே! (பாரதிதாசன் )
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்" என்பது வள்ளுவம் காட்டும் நெறி.
தமிழ் மறை நூல் யாவிலும் "சாகாக்கலை"க்கான (Art Of Deathlessness) சான்றுகள் மிகவும் மலிந்து கிடக்கின்றன.
உண்மைகளை உணர்ந்து தெளியும் அறிவுடைமை மனிதனை ஓங்கி உயரச் செய்யும் என்பதே வரலாற்று அறிஞர்களின் ஆய்வு. அறிவாற்றலில் ஓங்கி விளங்குபவர்களே அறிவர்; சான்றோர், செம்புலச்செல்வர் என்று உலகோரால் வணங்கப்படுவர். " அறிவரே அருளாளர் " ஆவர்.
"எனக்கு மிகவும் பிடித்தமானவன் ஞானி" என்கிறது கீதை.
தன்னை அறியும் ஞானத்தால் மட்டுமே முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்க முடியும் (Self Realization). தன்னை அறியாக் கல்வியினாலும், தன்னை உணரா வாழ்க்கையினாலும் (know thyself) யாது பயன் என நம் சித்தர் பெருமக்கள் வினவுகின்றனர்.
"என்னை அறிவித்து எனக்கருள் செய்து" என வேண்டுகிறாள் ஔவைப்பாட்டி (விநாயகர் அகவல் ).
"வாழ்ந்தால் இவர் போல் வாழ்வது என்று
ஊராருக்கு என்னை உதாரணங் காட்டு" என்பது "கிருஷ்ண கவசம்" (கண்ணதாசன்).
இந்நிலையில் மானுடப்பிறவியில் ப்ரம்ம வித்தையை அடைவதற்கு அருங்கருவியாய் கையில் கிடைப்பது கால மற்றும் மொழி வரலாற்று ஆராய்வும், அதன் விளைவான மெய்யறிவும் அது மங்காசுடர் விடுதலுமே ஆகும் என்பது மறுப்பதற்கில்லை.
"மெய்ப்பொருள் காண்பதறிவு" (திருவள்ளுவர்)
"பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல்,
மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே." (இடைக்காடர்)
"அண்ட"த்தை அறிந்த சித்தர்கள் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை என்பதை நாம் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். மெய்யறிவும் மொழி வளமுமின்றி சித்தர்களுடைய நூல்களை புரிந்து கொள்வது எளிதில் இயலாது. குருவினை நாடி உபதேசம் பெற்றவருக்கு "மெய்யறிவு" தாமாகவே சித்திக்கும் என்பது உண்மை!
ஆனால் இன்றைய நம் நிலை என்ன? நாம் எங்கே நிற்கிறோம்? எதனைப்பெற்றோம், எவற்றையெல்லாம் இழந்து நிற்கிறோம்? நம்மை சூழ்ந்துள்ள சூழ்ச்சிகளை உணர்கின்றோமா? என்பன சீரிய சிந்தனைக்கு.
செல்வந்தன் வீட்டு வறிய மக்களாய், அறிஞன் வீட்டு அறிவிலி மாந்தராய்,
(Poor children of a prosperous father, Ignorant children of an intellectual father.)
"பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
அன்னீ பெசண்ட் மற்றும் லெட் பெடர் எழுதிய " மக்களின் நாகரீக வளர்ச்சி" (Growth of human civilisation) என்னும் வரலாற்று நூலில் ஏசு பிறப்பதற்கு 13500 ஆண்டுகளுக்கு முன் தென் தமிழ் நாட்டிலிருந்து மனு சக்கரவர்த்தி உலகம் முழுவதையும் ஒரு குடைக் கீழ் ஆண்ட வரலாற்று செய்தி காண கிடக்கின்றது .
பேராசிரியர் ஹெக்கல் தமது "படைப்பின் வரலாறு" என்னும் நூலில் பழந்தமிழ் நாடு "மனித நாகரிகத்தின் தொட்டில்" எனக் கூறுகிறார்.
ப்ரிடானிய சங்கத்தின் தலைவரான சர் ஜான் எட்வன்ஸ் " மனிதன் பழந்தமிழ் நாட்டில் தான் தனது தோற்றத்தையும் வளர்ச்சியையும் பெற்றான்" என்கிறார்.
வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று
எனும் திருக்குறளில் 'பழங்குடி' என்றும், கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்தக்குடி என்று 'புறப்பொருள் வெண்பாமாலையிலும்' குறிப்பிடுவதும் கொண்டு, தமிழ் மக்களே ஆதிகுடிகள் ஆவர் என்பதை, தமிழ் மொழியை அழிக்க நினைப்பவர்கள் கூட ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
தமிழ் மந்திர ஒலி நிறைந்த மொழி :
இதில் பிரபஞ்ச அணுசக்தி மறைந்து நிரம்பி உள்ளது.
'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா' எனும் பாரதியின் பாடலில் மறைந்துள்ள "உயர்வு" "தொழுது" எனும் சொற்கள் ஆழ்ந்த சிந்தனைக்கு உரியவை.
தமிழன் அறிவியல் முன்னோடி : சித்தர் பாடல்களில் நிறைந்துள்ள சான்றுகளே இதற்கான பதிவு செய்யப் பட்ட தடயங்களாகும் (சான்றாக போகர் ஏழாயிரம், இன்னும் பிற).
பழந்தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில்:
அக்காலத்தில் தமிழ்க்குடி மக்கள் மந்திரம், மருத்துவம், தத்துவம், ஞானம், வர்மம், யோகக்கலை மற்றும் இரசவாதம் போன்ற எல்லா விதமான கலைகளிலும் சிறந்து விளங்கினர். பிரபஞ்ச தோற்றம், மனிதப்படைப்பு (Human creation), மற்றும் வாழ்வியல் சூக்குமங்களை நம் சித்தர் பெருமக்கள் கூறியதைப் போன்று உலகில் வேறு எவரும் கூறியதில்லை.
திருவள்ளுவர் தம் கருவூலமான திருக்குறளில் கூறும்
"செயற்கரிய செய்வர் பெரியர்"
"நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று"
"உடம்பு பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு" ஆகிய மருத்துவ நுட்பங்கள், திருவள்ளுவர் காலத்திற்கு முன்பே நிகழ்ந்த மருத்துவ விந்தைகள் ஆகும். இவை பெருமிதத்திற்க்குரியவை; மேல்நாட்டார் வியந்து பாராட்டுபவை. பொதிகை மலையின் நுழைவாயிலான "தோரணமலை", தேரையரின் அறுவை சிகிச்சை கூடமாகவே(Operation theatre) திகழ்ந்தமை அறியவும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பெரும்நாட்டில் பல்லாயிர ஆண்டுக்காலம் நாட்டின் நாகரிகத்துக்கு அடிகோலி , நாட்டை நல் வழி படுத்திய சித்தர்கள் தோன்றி இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
"வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
வித்தகச் சித்தர் கணமே" எனத் தாயுமானவ சுவாமிகள் தொழுகின்றார்.
(சித்தர்களை பற்றிய தனித் தொடர் பின்பு காண்போம்)
தமிழ்மொழி, தமிழ் அறிவியல், தமிழ் கலைகள் ஆகியவற்றின் தந்தையாக விளங்கியவர் அகத்தியனார் என்பது மரபு. "அகத்தியன் பயந்த பெருஞ்சொல் ஆரணங்கு", என்று கூறுவர். அகத்தியருக்கு முருகப் பெருமானே தமிழை ஓதுவித்தார் என்று அறியப்படுகிறது.
"தமிழ் முனிவன் வாழும் மலை" எனத் தமிழ் நூல்கள் வணங்குவதால் அகத்தியர் தாமிரபரணிக்கு மூலமாய் உள்ள பொதிகை மலையில் இன்றும் வாழ்ந்து அருள் பாலிக்கின்றார். கங்கை நதியின் தமக்கையாகவே தாமிரபரணி வழிபடப்படுகின்றது. மனித சமுதாயத்திற்கு கிடைத்த மகத்துவப் பொக்கிஷம் "பொதிகை" மலை என்பதை இயற்கையின் சூட்சுமம் தெரிந்த வல்லாளர்கள் நன்கு அறிவர். பிரபஞ்ச சக்தியின் (Cosmic Energy) சூட்சும உறைவிடமே பொதிகை மலை என்பதை அனைவரும் அறிவோமாக. இயற்கையின் சீதனங்களை போற்றிப் பாதுகாப்பதே உண்மையான இறைவழிபாடு எனக்கூறுகிறது "சிறுபஞ்சமூலம்" . (தமிழ்ச்சங்க வரலாறு அடுத்த "சொல் புதி"தாய் மலரும்)
'கண் போன போக்கிலே' எனும் திரைப்படப்பாடலில்
"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்" என்பது வாலியின் வரிகள் .
" தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா!! " என்ற சொற்களில் தமிழனின் உள்ளே உறைந்துள்ள பாரம்பரிய மரபுஅணுகளின் வீரியமும், அணுத் திறள்களின் அளப்பரிய ஞான சக்தியுமே உணர்த்திக் காட்டப் படுகின்றன என்பதை உணர்வீர்களாக .
இத்தமிழ் மண் சித்தர்பெருமக்களின் ஜீவ பூமி! நவகோடி சித்தர்கள் அருவாய் உருவாய் உலா வருகின்ற மண்! இம்மண்ணில் கருவிலிருந்து தமிழ் கற்று, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவர் மரபணு இரத்த அணுக்களிலும், அணுவிற்குள் அணுவாய்(Inner Atom) அகத்தியர் வாழ்கிறார்; போகர் வாழ்கிறார்; இடைக்காடர் முதலிய ஏனைய சித்தர்பெருமக்களும் மறைந்து உறைந்து வாழ்கின்றனர் எனும் அறிவியல் பேருண்மையை (Genetic Theory) அனைவரும் உணர்வோமாக !
இதனை உணர்த்திக் காட்டும் குரு வேண்டும். இதனை நூற்கல்வியினாலோ அன்றி கேள்வியினாலோ அறிய முடியாது.
" கல்வியல்ல கேள்வியல்ல
கைகாட்டும் காரணந்தான் " (பட்டினத்தார்) எனும் வாக்கிற் கிணங்க, அந்த இடத்தினை காட்டும் குரு நமக்கு கிடைத்தாலன்றி நம் காலம் வீண் காலமாகிவிடுமென்பது திண்ணம்.
"தொட்டுக்காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது" .
"குருவருள் திருவருள்"
"குரு வடிவாகி குவலயம் தன்னில்
திருவடி வைத்து " (விநாயகர் அகவல் )
"குருவாய், வருவாய், அருள்வாய் குகனே !" (அருணகிரிநாதர்)
குரு என்பவர் தெய்வத்தால் காட்டப்படுபவர்.குரு கிடைப்பது பல ஜென்ம, தொடர் ஆன்மயாத்திரையின் பலனே.அதற்கான வாழ்த்துக்கள் !
(குரு தலைப்பில் தனித் தொடர் பின்பு காண்போம்)
"என்னுரை"யின் நோக்கம் உங்களுக்குத் தெரிந்தனவற்றை தெரியாமலிருப்பதை உணர்த்தி தெரியவைப்பதே .
(The aim is to make you know that you don't know what you know! )
ஒருவர் பயன்பெற்றாலும் அது பெரும்பாக்கியமே! நன்று! வணக்கம்!
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
Very nice. Nandi 😊
ReplyDeleteIs the writer from UAE. I see the blog domain as .ae