தமிழ் முனிவன் தாள் பணிந்து !
ஒலியும் ஒளியும்...! ( Sound & Images )
உலகில் உள்ள அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகட்கும்
ஆதார வித்தாய், அகண்ட ஞானமாய்,
சிந்தனைக்கு உணவாய், செயலுக்கு விளக்கமாய் இருந்து, உலகினை
ஆட்கொண்டு ஆட்சி செய்வது ஒலி, ஒளிவடிவான இரு சக்திகளே !
பிரபஞ்சத்தின் தோற்றத்தில் முதலில் தோன்றியது ஒலி; தொடர்ந்து பின்னர்
காணப்பட்டது ஒளி ! அண்டத் தோற்றத்தின் ஆதியும் ஆதாரமுமான இவ்விருசக்திகளே பின்னர் தொடர்ந்த படைப்புகளுக்கும் அடிப்படைத் தத்துவங்களாயின.
இந்த அறிவியல் பேருண்மையை உலகிற்குச்சொன்ன முதல் விஞ்ஞானிகளே
நம் சித்தர் பெருமக்கள். (Origin of Universe)
இவ்விரு ஆதாரசக்திகளே ஆதி பகவனாய் வழிபாடு செய்யப்பட்டன.
சித்தர் பெருமக்கள் இவ்விரு சக்திகளை அகரம், உகரமாய் தொழுது
வணங்கினார்கள்.
சித்தர் பெருமக்கள் கண்டறிந்த இவ்விரு சக்திகளின் சேர்க்கையே,
சித்தவியலின் வேத மந்திரசொரூபமாயிற்று.
ஒலியும் ஒளியும்...! ( Sound & Images )
உலகில் உள்ள அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகட்கும்
ஆதார வித்தாய், அகண்ட ஞானமாய்,
சிந்தனைக்கு உணவாய், செயலுக்கு விளக்கமாய் இருந்து, உலகினை
ஆட்கொண்டு ஆட்சி செய்வது ஒலி, ஒளிவடிவான இரு சக்திகளே !
பிரபஞ்சத்தின் தோற்றத்தில் முதலில் தோன்றியது ஒலி; தொடர்ந்து பின்னர்
காணப்பட்டது ஒளி ! அண்டத் தோற்றத்தின் ஆதியும் ஆதாரமுமான இவ்விருசக்திகளே பின்னர் தொடர்ந்த படைப்புகளுக்கும் அடிப்படைத் தத்துவங்களாயின.
இந்த அறிவியல் பேருண்மையை உலகிற்குச்சொன்ன முதல் விஞ்ஞானிகளே
நம் சித்தர் பெருமக்கள். (Origin of Universe)
இவ்விரு ஆதாரசக்திகளே ஆதி பகவனாய் வழிபாடு செய்யப்பட்டன.
சித்தர் பெருமக்கள் இவ்விரு சக்திகளை அகரம், உகரமாய் தொழுது
வணங்கினார்கள்.
சித்தர் பெருமக்கள் கண்டறிந்த இவ்விரு சக்திகளின் சேர்க்கையே,
சித்தவியலின் வேத மந்திரசொரூபமாயிற்று.
அகர உகரங்களோடு மகரசேர்க்கை ,
ஓம் (AUM) எனும் ஆதி மந்திர பிரணவமாகப் பிறப்பெடுத்தது.
அகத்தியர் அருளிச்செய்த பாடலைக் காண்போம் :
“ ஓமென்ற பிரணவமே ஆதி வஸ்து
உலக மெல்லாந் தானிறைந்த யோமசத்தி
தானென்ற சத்தியடா எவரும் தானாய்
சதா கோடி மந்திரத்துக்கு உயிராய் நின்று
ஆமென்று ஆடினதும் ஓங்காரம் தான்
அடி முடியாய் நின்றதும் ஓங்காரம் தான்
நாமென்ற ஓங்காரம் தன்னிலே தான்
நாடி நின்ற எழுவகையும் பிறந்தவாறே “
- அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
ஓங்காரமென்ற பஞ்ச பூதத்தில் தான் “அ” எனும் நாதம் அடிமுடியாய் நின்று எழுவகையான தோற்றமாய் புலனாகிறது. “அ” என்பதே ஆதி வஸ்து. அனைத்து மந்திரங்களுக்கும் அடிநாதமாயிற்று. அதுவே அடியும் முடியுமாகும் என்பது இதன் பொருள்.
“ ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்றபர சிவமு மாகிச்
சோதியென்றே சிவனிடமாய்ச் சக்தி யாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி “
- சுப்பிரமணியர் ஞானம்
இவ்விரு சக்தி வடிவங்களை, மதங்களும் தெய்வமாகத் துதித்து வழிபாடு செய்த விபரத்தினைக் கீழ்க்காணும் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.
“ உய்யவென்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற ” - திருவாசகம்.
“ மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே “ - திருவாசகம்.
“ தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் “ - திருவாசகம்.
ஒலி, ஒளி வடிவான இம்மகத்தான சக்திகளே மனித வாழ்க்கையினை இயக்கும்
மாபெரும் சக்திகளாக விளங்குகின்றன.
ஒலிசக்தி ஓசை சத்தங்களுக்கும்,
ஓம் (AUM) எனும் ஆதி மந்திர பிரணவமாகப் பிறப்பெடுத்தது.
அகத்தியர் அருளிச்செய்த பாடலைக் காண்போம் :
“ ஓமென்ற பிரணவமே ஆதி வஸ்து
உலக மெல்லாந் தானிறைந்த யோமசத்தி
தானென்ற சத்தியடா எவரும் தானாய்
சதா கோடி மந்திரத்துக்கு உயிராய் நின்று
ஆமென்று ஆடினதும் ஓங்காரம் தான்
அடி முடியாய் நின்றதும் ஓங்காரம் தான்
நாமென்ற ஓங்காரம் தன்னிலே தான்
நாடி நின்ற எழுவகையும் பிறந்தவாறே “
- அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி
ஓங்காரமென்ற பஞ்ச பூதத்தில் தான் “அ” எனும் நாதம் அடிமுடியாய் நின்று எழுவகையான தோற்றமாய் புலனாகிறது. “அ” என்பதே ஆதி வஸ்து. அனைத்து மந்திரங்களுக்கும் அடிநாதமாயிற்று. அதுவே அடியும் முடியுமாகும் என்பது இதன் பொருள்.
“ ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்றபர சிவமு மாகிச்
சோதியென்றே சிவனிடமாய்ச் சக்தி யாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி “
- சுப்பிரமணியர் ஞானம்
இவ்விரு சக்தி வடிவங்களை, மதங்களும் தெய்வமாகத் துதித்து வழிபாடு செய்த விபரத்தினைக் கீழ்க்காணும் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.
“ உய்யவென்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற ” - திருவாசகம்.
“ மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே “ - திருவாசகம்.
“ தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் “ - திருவாசகம்.
ஒலி, ஒளி வடிவான இம்மகத்தான சக்திகளே மனித வாழ்க்கையினை இயக்கும்
மாபெரும் சக்திகளாக விளங்குகின்றன.
ஒலிசக்தி ஓசை சத்தங்களுக்கும்,
ஒளிசக்தி காட்சிகளுக்கும் ஆதாரமாயிருந்து,
காரண காரிய மூலசக்திகளாகத் தொழில் செய்கின்றன.
“ உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன “ என்பது ஔவை வாக்கு.
மனம் என்றால் என்ன ? இன்றைய வாழ்வில் அது ஒரு போக்குவரத்து நிறைந்த
வணிகச்சந்தை ! போக்குவரத்து இருக்கும் வரை சந்தை நடைபெறும்.
சந்தை நடைபெறும் வரை போக்குவரத்து நிகழும்.
மனம் - கொடுக்கல் வாங்கல் செய்கின்ற வங்கி !
கொடுப்பதை வாங்கும்;
வாங்குவதைக் கொடுக்கும் கணக்கின் படி !
சிலருக்கு வாங்காமலே கொடுக்கும்,
அவர்கள் தான் மகான்கள் ! செயற்கரிய செய்திடும் பெரியவர்கள் !
அதற்குக் காரணம் அவர்கள் பூர்வ ஜென்மத்தில் சேமித்த பிக்ஸட் டெபாசிட்!
இயற்கையில் எல்லாமே பதிவேட்டுக் கணக்குதான்.
சரி... விடயத்திற்கு வருவோம்...
மனத்திரையில் ஓடுகின்ற ஒலி ஒளிக்காட்சியின் விளைவான சொற்காட்சி,
மனப்பொருட்காட்சிகளே எண்ணங்களாக (Thoughts) விரிவடைகின்றன.
எண்ணங்களே மனம்; மனமே எண்ணங்கள்.
ஒலி வடிவசக்தியின் செயல்பாடு பேச்சு (speech) மற்றும் சத்தமாகவும்;
ஒளி வடிவசக்தியின் செயல்பாடு காட்சிகளாகவும் (Images) மனதில் பதிவாகி,
மறுபடி அங்கிருந்தே பதில் வினையாற்றுகின்றன என்பதை அறிவீர்களாக.
விழியில் விழுந்து மனதில் நுழைவன காட்சிகளாகும்; காதில் விழுந்து கருத்தில் புகுவன சொற்றொடர் ஒலிகளாகும்.
“ உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன “ என்பது ஔவை வாக்கு.
மனம் என்றால் என்ன ? இன்றைய வாழ்வில் அது ஒரு போக்குவரத்து நிறைந்த
வணிகச்சந்தை ! போக்குவரத்து இருக்கும் வரை சந்தை நடைபெறும்.
சந்தை நடைபெறும் வரை போக்குவரத்து நிகழும்.
மனம் - கொடுக்கல் வாங்கல் செய்கின்ற வங்கி !
கொடுப்பதை வாங்கும்;
வாங்குவதைக் கொடுக்கும் கணக்கின் படி !
சிலருக்கு வாங்காமலே கொடுக்கும்,
அவர்கள் தான் மகான்கள் ! செயற்கரிய செய்திடும் பெரியவர்கள் !
அதற்குக் காரணம் அவர்கள் பூர்வ ஜென்மத்தில் சேமித்த பிக்ஸட் டெபாசிட்!
இயற்கையில் எல்லாமே பதிவேட்டுக் கணக்குதான்.
சரி... விடயத்திற்கு வருவோம்...
மனத்திரையில் ஓடுகின்ற ஒலி ஒளிக்காட்சியின் விளைவான சொற்காட்சி,
மனப்பொருட்காட்சிகளே எண்ணங்களாக (Thoughts) விரிவடைகின்றன.
எண்ணங்களே மனம்; மனமே எண்ணங்கள்.
ஒலி வடிவசக்தியின் செயல்பாடு பேச்சு (speech) மற்றும் சத்தமாகவும்;
ஒளி வடிவசக்தியின் செயல்பாடு காட்சிகளாகவும் (Images) மனதில் பதிவாகி,
மறுபடி அங்கிருந்தே பதில் வினையாற்றுகின்றன என்பதை அறிவீர்களாக.
விழியில் விழுந்து மனதில் நுழைவன காட்சிகளாகும்; காதில் விழுந்து கருத்தில் புகுவன சொற்றொடர் ஒலிகளாகும்.
இவையிரண்டும் போய்ச்சேர்வதும், பதில் வினையாக மறுபடியும் தோன்றுவதற்குமான இருப்பிடம், பிறப்பிடமே மனம்.
தொடங்கிய இடத்தில் முடிகிறது; முடிகின்ற இடத்தில் தொடங்குகின்றது.
ஒளிசக்தி மூலம் மனதில் காட்சிகள் பிறக்கின்றன; ஒலிசக்தி மூலம் சொற்கள் பிறக்கின்றன.
மனத்திரையில் தோன்றும் காட்சிகள் மனக்கண்ணால் பார்க்கப்படுகின்றன.
மன நாடாவில் ஒலிக்கும் சொற்கள் மனதினால் கேட்கப்படுகின்றன.
தொடங்கிய இடத்தில் முடிகிறது; முடிகின்ற இடத்தில் தொடங்குகின்றது.
ஒளிசக்தி மூலம் மனதில் காட்சிகள் பிறக்கின்றன; ஒலிசக்தி மூலம் சொற்கள் பிறக்கின்றன.
மனத்திரையில் தோன்றும் காட்சிகள் மனக்கண்ணால் பார்க்கப்படுகின்றன.
மன நாடாவில் ஒலிக்கும் சொற்கள் மனதினால் கேட்கப்படுகின்றன.
இந்த ஆடியோ வீடியோ விளையாட்டினை நிகழ்த்தும் மாயக்கருவிதான் மனம்!
மனம் அமைதிகொள்கிறபோது எண்ணங்களிலும் அமைதி நிலவுகிறது (Silencing the brain cells).
அமைதி குடி கொண்ட மனமே ஆனந்தத்தின் பிறப்பிடம்.
அமைதியிலும் ஆனந்தத்திலும் பூக்கின்ற எண்ணங்கள் அமைதியான கதிர்வலைகளைக் காற்றில் பரவவிடுகின்றன.
அமைதி குடிகொண்ட மனத்தினுடைய மின்காந்த அலைகள்,
மனம் அமைதிகொள்கிறபோது எண்ணங்களிலும் அமைதி நிலவுகிறது (Silencing the brain cells).
அமைதி குடி கொண்ட மனமே ஆனந்தத்தின் பிறப்பிடம்.
அமைதியிலும் ஆனந்தத்திலும் பூக்கின்ற எண்ணங்கள் அமைதியான கதிர்வலைகளைக் காற்றில் பரவவிடுகின்றன.
அமைதி குடிகொண்ட மனத்தினுடைய மின்காந்த அலைகள்,
அருகிலிருக்கும் மனங்களையும் அமைதியால் நிரப்புகிறது.
அமைதி நிலை கொண்ட மனங்களில்,
அறம் தழைக்கிறது; ஆற்றல் பெருகுகிறது.
நெறி சிறக்கிறது; நேர்மை நிலைக்கிறது.
அந்த மனம் தானும் தழைத்து பிறரையும் வாழவைக்கிறது.
போட்டி பூசல்கள் மறைகின்றன; பொல்லாங்கு நீங்குகிறது.
இது தான் மக்களை ஈர்க்கின்ற Magnetism !
வாய் மௌனிக்க, மனம் தியானிக்க என்பது பக்தி வழிபாட்டின் பதவுரை.
மௌனம் என்பது என்ன ? தியானம் என்றால் என்ன ?
சற்று உற்றுநோக்குவோம்; கற்றுக்கொள்வதற்கு !
மனம் ஏவுதளம்; சொற்கள் ஏவுகணை.
வாய் அடங்குவது மௌனம். மனம் ஒடுங்குவது தியானம்.
ஆனால் நிதர்சன நிலையில் நடப்பது என்ன ?
மௌனத்தினை அடையும் முயற்சியில் வாய்ச்சொற்கள் நிற்கின்றன.
அமைதி நிலை கொண்ட மனங்களில்,
அறம் தழைக்கிறது; ஆற்றல் பெருகுகிறது.
நெறி சிறக்கிறது; நேர்மை நிலைக்கிறது.
அந்த மனம் தானும் தழைத்து பிறரையும் வாழவைக்கிறது.
போட்டி பூசல்கள் மறைகின்றன; பொல்லாங்கு நீங்குகிறது.
இது தான் மக்களை ஈர்க்கின்ற Magnetism !
வாய் மௌனிக்க, மனம் தியானிக்க என்பது பக்தி வழிபாட்டின் பதவுரை.
மௌனம் என்பது என்ன ? தியானம் என்றால் என்ன ?
சற்று உற்றுநோக்குவோம்; கற்றுக்கொள்வதற்கு !
மனம் ஏவுதளம்; சொற்கள் ஏவுகணை.
வாய் அடங்குவது மௌனம். மனம் ஒடுங்குவது தியானம்.
ஆனால் நிதர்சன நிலையில் நடப்பது என்ன ?
மௌனத்தினை அடையும் முயற்சியில் வாய்ச்சொற்கள் நிற்கின்றன.
ஆனால் மனத்தினுள் மனச்சொற்கள், உள் உரையாடல்கள் ஓய்வின்றி ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. ஒலிபெருக்கி ஒலி பரப்பு செய்த வண்ணமே இருக்கிறது மன வானொலி !
தியானம் செய்வதில் நிகழ்வது என்ன ?
நாம் சொல்கிறோம்; மனம் கேட்க மறுக்கிறது .
நாம் செய்கிறோம்; மனம் ஏற்க மறுக்கிறது .
நாம் அடக்கமுயல்கிறோம்; மனம் கிளர்ச்சி செய்கிறது .
ஆக மனதோடு நடைபெறும் போராட்டத்தினை தியானம் என்கிறோம்;
மனதை யுத்த களமாக்கி ரணப்படுத்துகிறோம் தியானம் என்ற பெயரில்.
முடிவு தோல்வியே தொடர்கதையாகி, விரக்தியே எஞ்சிய இருப்பு !
தானே மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய அரும்பினை, தடியால் அடித்து மலரச்செய்கின்றோம். அரும்பு சிதைந்து சிதிலமடைந்ததுதான் மிச்சம்.
தியானம் என்பது மனத்தை அடக்கும் முறையல்ல; மனதினைப் புரிந்து கொள்ளுகின்ற பெருமுயற்சி! உணர்ந்தால் வெற்றிபெறலாம் !
உண்மையான தியானத்தில், தியானிப்பவனும் தியானிக்கப் படுகின்ற பொருளும்
மறைவுற்று, தியான நிகழ்வு மட்டுமே நிலை நிற்கும்.
மனம் அமைதியுற என்னதான் வழி ? அமைதி யெனும் அமுதம் எங்குதான் கிடைக்கும் ?அதனை நுகர வழிதான் என்ன ?
அமைதியென்றால் யாதெனக்கேட்டேன் ?
“இருந்து பார்“ என்றான் இறைவன்.
அப்படி என்றால் இதில் உணர்த்தப்படுவது என்ன ?
தியானம் செய்வதில் நிகழ்வது என்ன ?
நாம் சொல்கிறோம்; மனம் கேட்க மறுக்கிறது .
நாம் செய்கிறோம்; மனம் ஏற்க மறுக்கிறது .
நாம் அடக்கமுயல்கிறோம்; மனம் கிளர்ச்சி செய்கிறது .
ஆக மனதோடு நடைபெறும் போராட்டத்தினை தியானம் என்கிறோம்;
மனதை யுத்த களமாக்கி ரணப்படுத்துகிறோம் தியானம் என்ற பெயரில்.
முடிவு தோல்வியே தொடர்கதையாகி, விரக்தியே எஞ்சிய இருப்பு !
தானே மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய அரும்பினை, தடியால் அடித்து மலரச்செய்கின்றோம். அரும்பு சிதைந்து சிதிலமடைந்ததுதான் மிச்சம்.
தியானம் என்பது மனத்தை அடக்கும் முறையல்ல; மனதினைப் புரிந்து கொள்ளுகின்ற பெருமுயற்சி! உணர்ந்தால் வெற்றிபெறலாம் !
உண்மையான தியானத்தில், தியானிப்பவனும் தியானிக்கப் படுகின்ற பொருளும்
மறைவுற்று, தியான நிகழ்வு மட்டுமே நிலை நிற்கும்.
மனம் அமைதியுற என்னதான் வழி ? அமைதி யெனும் அமுதம் எங்குதான் கிடைக்கும் ?அதனை நுகர வழிதான் என்ன ?
அமைதியென்றால் யாதெனக்கேட்டேன் ?
“இருந்து பார்“ என்றான் இறைவன்.
அப்படி என்றால் இதில் உணர்த்தப்படுவது என்ன ?
அதற்கான இன்றியமையாத் தகுதிகளை அடைவது தானே.
அமைதி குடிகொள்வதற்கான தகுதிகளோடு இருந்தால்,
அமைதி குடிகொள்வதற்கான தகுதிகளோடு இருந்தால்,
அமைதி தானே வந்து கிட்டும்.
அமைதி முயன்று பயின்று பெறுகின்ற பொருளல்ல !
சூப்பர் மார்கெட்டில் பில் போட்டு வாங்குகிற மளிகைச் சாமான்கள் அல்ல !
ஏடிஎம் ல் கார்டு போட்டு எடுக்கின்ற இன்ஸ்டாகேஷ் அல்ல!
இது தகுதி நிரம்பிய நிலையில் தானே கிட்டுகின்ற வரம் !
அது தேடிவரும் செல்வம்; நாடி வரும் நிதியம் !
இறைவனும் இயற்கையும் சேர்ந்து அருளுகின்ற அருட்க் கொடை !
“ காசி ராமேசுரம் கால் நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ - குதம்பாய்
ஈசனைக் காணுவையோ ?“
“ இருந்த விடத்திலிருந்து யறியாமல்
வருந்தித் திரிவதென்னோ - குதம்பாய்
வருந்தித் திரிவதென்னோ ?“ - குதம்பைச் சித்தர்.
இதனையே சிவவாக்கியர்
“ சாம நாலு வேதமும், சகல சாத்திரங்களும்
நேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் “ என்கிறார்.
தியானத்தில் அமைதி பிறக்கிறதா ?
அமைதி முயன்று பயின்று பெறுகின்ற பொருளல்ல !
சூப்பர் மார்கெட்டில் பில் போட்டு வாங்குகிற மளிகைச் சாமான்கள் அல்ல !
ஏடிஎம் ல் கார்டு போட்டு எடுக்கின்ற இன்ஸ்டாகேஷ் அல்ல!
இது தகுதி நிரம்பிய நிலையில் தானே கிட்டுகின்ற வரம் !
அது தேடிவரும் செல்வம்; நாடி வரும் நிதியம் !
இறைவனும் இயற்கையும் சேர்ந்து அருளுகின்ற அருட்க் கொடை !
“ காசி ராமேசுரம் கால் நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ - குதம்பாய்
ஈசனைக் காணுவையோ ?“
“ இருந்த விடத்திலிருந்து யறியாமல்
வருந்தித் திரிவதென்னோ - குதம்பாய்
வருந்தித் திரிவதென்னோ ?“ - குதம்பைச் சித்தர்.
இதனையே சிவவாக்கியர்
“ சாம நாலு வேதமும், சகல சாத்திரங்களும்
நேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் “ என்கிறார்.
தியானத்தில் அமைதி பிறக்கிறதா ?
அல்லது அமைதியின் மூலம் தியானம் கிட்டுகிறதா ?
அமைதி குடிகொண்ட மனத்தில் தியானம் பிறக்கிறதா ?
சிந்தனையாளர்கள் பதில் சொல்லுங்கள் !
குதிரைக்கு முன்னே வண்டியைப் பூட்டுவதைப்போல, தியானத்தின் மூலமாக அமைதியை அடையும் முயற்சிகள் தான் இன்று காண்பதெல்லாம்.
குதிரைக்கு முன்னே வண்டியைப் பூட்டுவதைப்போல, தியானத்தின் மூலமாக அமைதியை அடையும் முயற்சிகள் தான் இன்று காண்பதெல்லாம்.
அதற்காகப் புற்றீசல்களைப் போல் புறப்பட்டிருக்கும் ஏராளமான
யோகா மையங்கள், மூலை முடுக்குகளிலெல்லாம்.
இவற்றால் விளைந்த பயன்கள் யாவை ?
“அமைதிக்கான வழி”யைப்பற்றி பேசுகின்றவர் மனமும் அமைதியின்றி அலைக்கழிகிறது; அதைக் கேட்கிறவர்கள் மனமும் அமைதியின்றி அலைக்கழிகிறது.
அதைப்பற்றி எழுதியவர் மனதிலும் அமைதியில்லை;
இவற்றால் விளைந்த பயன்கள் யாவை ?
“அமைதிக்கான வழி”யைப்பற்றி பேசுகின்றவர் மனமும் அமைதியின்றி அலைக்கழிகிறது; அதைக் கேட்கிறவர்கள் மனமும் அமைதியின்றி அலைக்கழிகிறது.
அதைப்பற்றி எழுதியவர் மனதிலும் அமைதியில்லை;
வாசித்தவர் மனதிலும் அமைதியில்லை.
பயிற்சி அளிப்பவரும் அமைதியிழந்து தவிக்கிறார்;
பயிற்சி பெறுவோரும் அமைதியிழந்து அலைகின்றனர்.
“ குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்ட மாடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே “ - திருமந்திரம்.
மனிதனுக்குக் கிட்டாத அமைதி, மகான்களுக்கு மட்டும் எப்படி வாய்த்தது ?
அதன் ரகசியம் என்ன ?
“ எட்டாத பேரின்பம் எனை வந்து விழுங்கியதே “ எனப் பாடுகிறாரே பட்டினத்தார்.
சுக்கிலிருக்குது சூட்சுமம் !
இதன் ரகசியம் அகத்தூய்மை !
தூய்மையான மனமே அமைதியைப் பிரசவிக்கிறது .
மனத்தூய்மையில் மௌனம் பிறக்கின்றது .
மனத்தூய்மையில் தியானம் கிட்டுகின்றது .
அகத்தூய்மையே அமைதியின் ஆணிவேர்.
உண்மையிலும், அகத்தூய்மையிலும்,
மனத்திண்மையிலும் அமைதியெனும் கற்பக விருட்சம்
தானே முளைத்தோங்கி வளர்கின்றது.
“ கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி ஏகம்பனே ! “ - எனப்
பட்டினத்தார் பாடுவதைக் காண்க.
மனம் ஒரு மகாமேரு ! அதில் விளைகின்ற சாகாமூலியே அமைதி !
மனம் ஒரு பொதிகை ! அதில் பிறக்கின்ற தாமிரபரணி எனும் ஜீவநதியே அமைதி !
“ மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே “
எனும் திருமந்திரப் பாடலைக் காண்க.
மந்திரத்தை ஓதும் போது மனம் ஒரு நிலையில் நிற்காமல் போய்விடும்
என்றும் சித்தர் பெருமக்கள் சொல்கின்றனர்.
“ முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது
மோசமடா மனந்தானும் ரெண்டாய்ப் போகும் “
என்கிறார் காகபுசுண்டர்.
“ கை விளக்குக் கொண்டு கடலில் விழுவார்போல்
மெய் விளக்கு உன்னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே “ - இடைக்காடர் .
மனம் ஒரு மாயப்புதையல் ! மர்மக் குகை !
புரியாதவனுக்கு புதிர்; புரிந்தவனுக்கு மூலிகை !
அறியாதவனுக்கு விலங்கு; அறிந்தவனுக்கு விளக்கு !
மனம் கர்ம வினைகளின் கருவி, காலத்தின் கைப்பாவை !
ஆண்டியை அரசனாக்குவதும், அரசனை ஆண்டியாக்குவதும் இதன் திருவிளையாடல்கள் ! ஆனால் கணக்கு மட்டும் பிசகுவதில்லை.
குருவருள் கூடிவந்தால் நடைமேடையில் நின்றவனைக் கூட நாட்டினை ஆளவைக்கும்.
“ குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்ட மாடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே “ - திருமந்திரம்.
மனிதனுக்குக் கிட்டாத அமைதி, மகான்களுக்கு மட்டும் எப்படி வாய்த்தது ?
அதன் ரகசியம் என்ன ?
“ எட்டாத பேரின்பம் எனை வந்து விழுங்கியதே “ எனப் பாடுகிறாரே பட்டினத்தார்.
சுக்கிலிருக்குது சூட்சுமம் !
இதன் ரகசியம் அகத்தூய்மை !
தூய்மையான மனமே அமைதியைப் பிரசவிக்கிறது .
மனத்தூய்மையில் மௌனம் பிறக்கின்றது .
மனத்தூய்மையில் தியானம் கிட்டுகின்றது .
அகத்தூய்மையே அமைதியின் ஆணிவேர்.
உண்மையிலும், அகத்தூய்மையிலும்,
மனத்திண்மையிலும் அமைதியெனும் கற்பக விருட்சம்
தானே முளைத்தோங்கி வளர்கின்றது.
“ கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும், நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும், துதியாப் பிழையும், தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி ஏகம்பனே ! “ - எனப்
பட்டினத்தார் பாடுவதைக் காண்க.
மனம் ஒரு மகாமேரு ! அதில் விளைகின்ற சாகாமூலியே அமைதி !
மனம் ஒரு பொதிகை ! அதில் பிறக்கின்ற தாமிரபரணி எனும் ஜீவநதியே அமைதி !
“ மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே “
எனும் திருமந்திரப் பாடலைக் காண்க.
மந்திரத்தை ஓதும் போது மனம் ஒரு நிலையில் நிற்காமல் போய்விடும்
என்றும் சித்தர் பெருமக்கள் சொல்கின்றனர்.
“ முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது
மோசமடா மனந்தானும் ரெண்டாய்ப் போகும் “
என்கிறார் காகபுசுண்டர்.
“ கை விளக்குக் கொண்டு கடலில் விழுவார்போல்
மெய் விளக்கு உன்னுள்ளிருக்க வீழ்குவதேன் புல்லறிவே “ - இடைக்காடர் .
மனம் ஒரு மாயப்புதையல் ! மர்மக் குகை !
புரியாதவனுக்கு புதிர்; புரிந்தவனுக்கு மூலிகை !
அறியாதவனுக்கு விலங்கு; அறிந்தவனுக்கு விளக்கு !
மனம் கர்ம வினைகளின் கருவி, காலத்தின் கைப்பாவை !
ஆண்டியை அரசனாக்குவதும், அரசனை ஆண்டியாக்குவதும் இதன் திருவிளையாடல்கள் ! ஆனால் கணக்கு மட்டும் பிசகுவதில்லை.
குருவருள் கூடிவந்தால் நடைமேடையில் நின்றவனைக் கூட நாட்டினை ஆளவைக்கும்.
மனித வாழ்வினை இயக்குவதும், மனிதனை ஆளுவதும்,
ஆட்டு விப்பதும் இம்மனம் என்னும் மந்திரக்கோல் தான்.
விதைத்தவனை அறுவடை செய்யவைப்பதும்,
அறுவடை செய்தவனை விதைக்கவைப்பதும் எண்ணங்களே !
இதில் தினை விதைப்பதும் வினை விதைப்பதும் அவரவர் கர்ம வினைகளே !
தன்னுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் சித்தமெனும் பேரேட்டில் (Cosmic Ledger) பதிவாகின்றன எனும் உண்மை உணரப்படும் போது,
விதைத்தவனை அறுவடை செய்யவைப்பதும்,
அறுவடை செய்தவனை விதைக்கவைப்பதும் எண்ணங்களே !
இதில் தினை விதைப்பதும் வினை விதைப்பதும் அவரவர் கர்ம வினைகளே !
தன்னுடைய ஒவ்வொரு சொல்லும் செயலும் சித்தமெனும் பேரேட்டில் (Cosmic Ledger) பதிவாகின்றன எனும் உண்மை உணரப்படும் போது,
சித்தம் சுத்திகரிப்பு வேலையைத் தொடங்குகின்றது.
என்ன கொடுப்பது என்பதை இறைவன் தீர்மானிக்கிறான்.
எப்போது என்பதை காலம் தீர்மானிக்கிறது.
எப்படி என்பதை இயற்கை தீர்மானிக்கிறது.
அதைப் பெறுவதற்கான தகுதியை மனிதன் மட்டுமே தீர்மானிக்கின்றான்.
தேடி வரும் காலம் வந்து, தேடியது ஓடி வரும் வேளையில் அதனைப் பெறும் அகத்தூய்மையோடும், குணப்பொலிவுடனும், குருவருளுடனும் இருக்கவேண்டியது மனிதனின் கருத்தும் கடமையும் அல்லவா ?
சோறுபோடும் வயல் நிலங்கள் கூறுபோடப்படுகின்றன,
வளர்ச்சித் திட்டங்கள் எனும் மாயையில்.
கூட்டம் போடுகிறான்; கொடிபிடிக்கிறான்;
கோஷம் போடுகிறான்; உண்ணாவிரதம் இருக்கிறான்.. ஆனால் முடிவு என்ன ?
ஏன்னு கேட்க ஆளில்லை; ஏறிட்டுப் பார்க்க நாதியில்லை.
ஒன்றுபடு ஒன்று சேர்,
“ ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் ?“ - பாரதியார் .
காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார். உலகமே உற்று நோக்கியது.
முடிவில் வெற்றிகிட்டியது.
எலும்புந் தோலுமான அரைநிர்வாண மனிதனால் முடிந்தது உன்னால் ஏன் முடியவில்லை ?
அவரிடம் இருந்தது என்ன ? உன்னிடம் இல்லாதது என்ன ?
அந்த வெற்றியின் ரகசியம் என்ன ? ஆழ்ந்து சிந்திப்பீர் !
அது அவரிடமிருந்த ஆன்ம பலம் (Spiritual strength);
உண்மையின் அருட்சக்தி (Divine power of Truth);
அதனை அடைவதில் அவருக்கிருந்த வைராக்கியம்.
இவை ஏன் நம்மிடத்தில் இல்லை ?
அந்த அளப்பறிய ஆன்மசக்தி எங்கே வீணடிக்கப்பட்டு, எவ்விடத்தில் விரையமாகிக் கொண்டிருக்கிறது என்பதைத் திடமுடன் தியானிக்க !
இறைக் கொடையான இந்த அருட் பெருஞ்சக்தி, “எண்ணங்கள்” எனும் வடிகாலாய் எவ்விதம் வீணடிக்கப் படுகின்றது என்பதை என்றேனும் உற்று நோக்கியது உண்டா?
இதன் விளைவு ஒளியிழந்த கண்கள், உறுதியில்லா மனம்,
நெஞ்சில் உரமின்மை, நேர்மைத் திறமின்மை.
ஏறு போல் பீடு நடை எங்கே போயிற்று ?
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை எவ்விதம் தொலைந்தது ?
இடைவிடாத எண்ணங்களும், மனம் சதா பேசுவதும்,
வாய் எதாவது பேசிக் கொண்டேயிருப்பதும்
மனிதனின் சுவாச சக்தியினைக் குறைப்பதாக அறிவியல் கூறுவதை சிந்திக்க.
மனதில் ஓடுகின்ற ஆடியோ வீடியோக்களுக்கு மனோசக்தியும், மனதிடமும் பலியாகிக்கொண்டிருக்கும் உண்மையை உணர்வீர்.
திடமனதும், தெளிவான சிந்தையுமே
சித்தர் பெருமக்கள் வலியுறுத்திக்கூறும்
வாழ்வியல் உண்மைகளாகும்!
நம் முன்னோர்கள் மௌனம், தியானம் என்றெல்லாம்
நமக்குக் கற்றுக் கொடுத்தது எதற்காக என்பது
இப்போது புரிகிறதல்லவா? உணர்ந்தால் உதவும் !
மனத்தினுள் ஓடும் இந்த ஆடியோ, வீடியோ “mute” ஆகும்போது
பேச்சுரை நின்று மனோலயம் தேக்கமுற்று, சிந்தை தெளிவடைகின்றது.
எல்லையில்லா ஆனந்தம் கிட்டி,
சத்தத்தினுள்ளே சதாசிவமும்,
சித்தத்தினுள்ளே சிவலிங்கமும் காட்டி,
கணுமுற்றி நின்ற கரும்பு கையில் கிடைக்கின்றது.
கிட்டிய கரும்பின் நுனிக்கரும்பு இனிப்புச் சுவை தரும்போது அந்த சாற்றினைப் பருகி அண்ட அருள் வெளியில் கலக்கும் முக்தி நிலை வாய்க்கின்றது.
இவ்வுண்மையினை
“ ஞானமறிந்தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதையுண்டு பசியானால் - ஞானமது
கண்டாலுடல் உயிருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசமுண் .“ - திருவள்ளுவர் ஞானம்
எனும் செய்யுள் வரிகளில் காண்க. விட்டகுறை இருந்தால் பரிபாஷை விளங்கும்!
எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்கப் பழகு.
அனைத்தையும் ஆழ்ந்து உற்றுநோக்கப் பழகு.
அனைத்தையும் ஆழ்ந்து வாசிக்கப் பழகு.
எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்கப் பழகு.
ஆழ்ந்த சிந்தனை அமைதியில் தான் பிறக்கின்றது.
அமைதியை உள்முகமாக உன் உள்ளே தேடு. அது ஒரு ஆன்மீக பொக்கிஷம்!
அங்கே அகவிருள் அகன்று அறிவொளி வீசட்டும்.
உன்னை நீயே விலகி இருந்து கவனி என்கிறார்கள் ஞானியர்.
தன்னை அறிதலே தன்னுள் இறைவனை அறிவதாகும்.
உன்னை அறிதலே உன்னுள் உலகினை அறிவதாகும்..
“ ஆதியாய் நின்று அறிவு முதலெழுத்து
ஓதிய நூலின் பயன் “ என்ற ஔவைக் குறளால்
நூல்களை ஓதிய பயன், ஆதியான அறிவை அடைவதே ஆகும்
என்பது நன்கு அறியப்படுகிறது.
உன்னையறிவித்து உனக்கருள் செய்திடும் குருவினை தேடு.
தெய்வம் துணை நின்றால் நிச்சயம் கைகூடும்.
விட்டகுறை விளங்கும் போது விளக்கொளியாய் வந்து நிற்பார்.
ஆதியை அறிவித்து, உட்கலந்த சோதியைக் காட்டும் அனுபூதிச் செல்வர்.
அறிவொளி ஏற்றி மெய்ச் சுடரொளி பரவச் செய்பவர்.
அவரே ஞான ஒளி !
சொற்பதங்கடந்த கற்பகத்தரு !
வினைதீர்க்கும் விநாயகர் !
ஓங்காரத்தின் உட்பொருளை ஊட்டி, நாதாந்தமான மெய்ப்பொருளைக்
காட்ட வல்ல சற்குரு!
குருவினுடைய அருட்பெரும் வல்லமை குறித்து, அகத்தியர் அருளிச் செய்த
பாடலைக் காண்போம் :
“ வாசாதே தீட்சை வந்தோர் வாழ்ந்திருந்த ஊரில்
வருகாது வருகாது வினைகள் தானே .”
“ வினையில்லை அவரை நித்தம் தரிசனமே செய்யில்
வேதாந்த சாரத்தே மனமும் தேறும்
இணையில்லை யவர் மதத்தை போற்றி நிற்க
வேண்டியவர் மனது வந்து திரும்பு மட்டும்
வினையில்லை யுண்மையதே தச தீஷை செய்யும்
வேதாந்த சிரோன்மணியே யுன்னைப் பார்த்தால்
வினையில்லை என்னுடைய உடல் பொருளும் ஆவி
விளங்கியதோர் உதகத்தில் தாரையூதே .“
- அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி .
பின் வரும் பாடலைக் காணுங்கள் :
“ காட்டிலிருந்தாலும் கனதவஞ்செய்தாலும்
காட்டுங் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிய லாகேதே ” - புண்ணாக்கு சித்தர் .
தேனீயானது, மலரின் உள்ளேயிருக்கும் தேனையருந்தாமல்,
இதழ்களுக்கு வெளியே சுற்றும் வரை,
ரீங்காரம் செய்து கொண்டு பூவைச் சுற்றி சுற்றி வரும்.
ஆனால் பூவுக்குள் நுழைந்த பின்பு,
ஓசை சத்தம் அடங்கித் தேனைக் குடிக்கும்.
மனமும் அதுபோலத் தான் !
அல்லும் பகலும் அலைந்து திரிந்து உழன்று கொண்டேயிருக்கும்.
நெறியுயர்ந்த சற்குரு நேர் வாய்த்த பின்பு, அவரது மின்காந்த சக்தி அலைகள்,
மனதில் அமைதியினை நிரப்பி ஆனந்த பூர்த்தி அளிக்கும்.
இதனையே மனஒடுக்கம் என்பர் பெரியோர்.
“ தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே .”
- திருமந்திரம் .
“ நல்லோரைக் காண்பதுவும் நன்றே “ என்பது முதுமொழி.
குருவின் பார்வை ஒன்றே போதும். அதுவே உன்னதமான நயன தீட்சையாகும்.
“ குரு பார்க்க கோடி புண்ணியம் “ என ஜோதிடம் கூறுவதைக் காண்க.
“ ஆசானு மீசானு மொன்றே யாகும் “ - திருமூலர் ஞானம் .
பெட்டியிதைப் பெறுக என இறைவன் அளிக்கின்றான்;
அது இருக்குமிடத்திற்கு விட்டகுறை அழைக்கின்றது;
அதனை திறக்கும் சாவி குருவின் கையில்;
திறந்திடும் மெய்யறிவு விதியின் கையில்.
அவனருளாலே அவன் தாள் பணிதலே மெய்யறிவு தேடும் மெய்வழிச்சாலை.
மெய்க்கல்வி துணையுடன் மெய்யறிவு பெறவும்,
மெய்யறிவுத் துணையுடன் மெய்ப்பொருள் தேடும் பாதையில்,
இந்த சிந்தனை ஓவியம் ஒரு அறிவிப்புப் பலகை !
கை காட்டும் சின் முத்திரை !
அகர உகர மெய்ப்பொருள் பற்றி சித்தர்கள் கூறியுள்ளதை மீறி,
இம்மியளவு கூட மிகையாகக் கூறிட முயற்சிக்கவில்லை.
மிகுந்த எச்சரிக்கையுடனே இதனைத் துவங்கி முடிக்கிறேன்.
“ அவனுடைய விதியிருந்தால் வருகு மென்றே “ அகத்திய முனிவர் கூறுகிறார்.
இது “ எட்டிரண்டி”னை அறியும் முயற்சியல்ல.
தன்னை அறியும் தவம் ! உண்மையறியும் வேள்வி !
அறிவியல் உளவியல் கலப்படமில்லாத அசல் அக்மார்க் சிந்தனை !
தன்னையறியும் தவம் தழைத்தோங்க வேண்டுமென்பதே இதன் நோக்கம்!
இதனை வாசிப்பவர்களுக்கு விட்டகுறை வாய்த்தால்
சித்தர் பெருமக்களே குருவாய் வந்து,
கலியுகக் கண்ணனாய் அருள் புரிந்து, ஆசி வழங்கிடுவர்.
அதற்கான வாழ்த்துக்கள் !
அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும் !
“ நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய் “ - திருப்பாவை.
“ சொன்னேனறிந்து சுகமாயுலகோர்க்கு
எந்நாளும் வாழ்க வென்றே யான் “ - காகபுசுண்டர்.
சொல் என்றும் மொழி என்றும்
பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலை ஏதும் இல்லை - கண்ணதாசன்.
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...
என்ன கொடுப்பது என்பதை இறைவன் தீர்மானிக்கிறான்.
எப்போது என்பதை காலம் தீர்மானிக்கிறது.
எப்படி என்பதை இயற்கை தீர்மானிக்கிறது.
அதைப் பெறுவதற்கான தகுதியை மனிதன் மட்டுமே தீர்மானிக்கின்றான்.
தேடி வரும் காலம் வந்து, தேடியது ஓடி வரும் வேளையில் அதனைப் பெறும் அகத்தூய்மையோடும், குணப்பொலிவுடனும், குருவருளுடனும் இருக்கவேண்டியது மனிதனின் கருத்தும் கடமையும் அல்லவா ?
சோறுபோடும் வயல் நிலங்கள் கூறுபோடப்படுகின்றன,
வளர்ச்சித் திட்டங்கள் எனும் மாயையில்.
கூட்டம் போடுகிறான்; கொடிபிடிக்கிறான்;
கோஷம் போடுகிறான்; உண்ணாவிரதம் இருக்கிறான்.. ஆனால் முடிவு என்ன ?
ஏன்னு கேட்க ஆளில்லை; ஏறிட்டுப் பார்க்க நாதியில்லை.
ஒன்றுபடு ஒன்று சேர்,
“ ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் ?“ - பாரதியார் .
காந்தியும் உண்ணாவிரதம் இருந்தார். உலகமே உற்று நோக்கியது.
முடிவில் வெற்றிகிட்டியது.
எலும்புந் தோலுமான அரைநிர்வாண மனிதனால் முடிந்தது உன்னால் ஏன் முடியவில்லை ?
அவரிடம் இருந்தது என்ன ? உன்னிடம் இல்லாதது என்ன ?
அந்த வெற்றியின் ரகசியம் என்ன ? ஆழ்ந்து சிந்திப்பீர் !
அது அவரிடமிருந்த ஆன்ம பலம் (Spiritual strength);
உண்மையின் அருட்சக்தி (Divine power of Truth);
அதனை அடைவதில் அவருக்கிருந்த வைராக்கியம்.
இவை ஏன் நம்மிடத்தில் இல்லை ?
அந்த அளப்பறிய ஆன்மசக்தி எங்கே வீணடிக்கப்பட்டு, எவ்விடத்தில் விரையமாகிக் கொண்டிருக்கிறது என்பதைத் திடமுடன் தியானிக்க !
இறைக் கொடையான இந்த அருட் பெருஞ்சக்தி, “எண்ணங்கள்” எனும் வடிகாலாய் எவ்விதம் வீணடிக்கப் படுகின்றது என்பதை என்றேனும் உற்று நோக்கியது உண்டா?
இதன் விளைவு ஒளியிழந்த கண்கள், உறுதியில்லா மனம்,
நெஞ்சில் உரமின்மை, நேர்மைத் திறமின்மை.
ஏறு போல் பீடு நடை எங்கே போயிற்று ?
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை எவ்விதம் தொலைந்தது ?
இடைவிடாத எண்ணங்களும், மனம் சதா பேசுவதும்,
வாய் எதாவது பேசிக் கொண்டேயிருப்பதும்
மனிதனின் சுவாச சக்தியினைக் குறைப்பதாக அறிவியல் கூறுவதை சிந்திக்க.
மனதில் ஓடுகின்ற ஆடியோ வீடியோக்களுக்கு மனோசக்தியும், மனதிடமும் பலியாகிக்கொண்டிருக்கும் உண்மையை உணர்வீர்.
திடமனதும், தெளிவான சிந்தையுமே
சித்தர் பெருமக்கள் வலியுறுத்திக்கூறும்
வாழ்வியல் உண்மைகளாகும்!
நம் முன்னோர்கள் மௌனம், தியானம் என்றெல்லாம்
நமக்குக் கற்றுக் கொடுத்தது எதற்காக என்பது
இப்போது புரிகிறதல்லவா? உணர்ந்தால் உதவும் !
மனத்தினுள் ஓடும் இந்த ஆடியோ, வீடியோ “mute” ஆகும்போது
பேச்சுரை நின்று மனோலயம் தேக்கமுற்று, சிந்தை தெளிவடைகின்றது.
எல்லையில்லா ஆனந்தம் கிட்டி,
சத்தத்தினுள்ளே சதாசிவமும்,
சித்தத்தினுள்ளே சிவலிங்கமும் காட்டி,
கணுமுற்றி நின்ற கரும்பு கையில் கிடைக்கின்றது.
கிட்டிய கரும்பின் நுனிக்கரும்பு இனிப்புச் சுவை தரும்போது அந்த சாற்றினைப் பருகி அண்ட அருள் வெளியில் கலக்கும் முக்தி நிலை வாய்க்கின்றது.
இவ்வுண்மையினை
“ ஞானமறிந்தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதையுண்டு பசியானால் - ஞானமது
கண்டாலுடல் உயிருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசமுண் .“ - திருவள்ளுவர் ஞானம்
எனும் செய்யுள் வரிகளில் காண்க. விட்டகுறை இருந்தால் பரிபாஷை விளங்கும்!
எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனிக்கப் பழகு.
அனைத்தையும் ஆழ்ந்து உற்றுநோக்கப் பழகு.
அனைத்தையும் ஆழ்ந்து வாசிக்கப் பழகு.
எல்லாவற்றையும் ஆழ்ந்து சிந்திக்கப் பழகு.
ஆழ்ந்த சிந்தனை அமைதியில் தான் பிறக்கின்றது.
அமைதியை உள்முகமாக உன் உள்ளே தேடு. அது ஒரு ஆன்மீக பொக்கிஷம்!
அங்கே அகவிருள் அகன்று அறிவொளி வீசட்டும்.
உன்னை நீயே விலகி இருந்து கவனி என்கிறார்கள் ஞானியர்.
தன்னை அறிதலே தன்னுள் இறைவனை அறிவதாகும்.
உன்னை அறிதலே உன்னுள் உலகினை அறிவதாகும்..
“ ஆதியாய் நின்று அறிவு முதலெழுத்து
ஓதிய நூலின் பயன் “ என்ற ஔவைக் குறளால்
நூல்களை ஓதிய பயன், ஆதியான அறிவை அடைவதே ஆகும்
என்பது நன்கு அறியப்படுகிறது.
உன்னையறிவித்து உனக்கருள் செய்திடும் குருவினை தேடு.
தெய்வம் துணை நின்றால் நிச்சயம் கைகூடும்.
விட்டகுறை விளங்கும் போது விளக்கொளியாய் வந்து நிற்பார்.
ஆதியை அறிவித்து, உட்கலந்த சோதியைக் காட்டும் அனுபூதிச் செல்வர்.
அறிவொளி ஏற்றி மெய்ச் சுடரொளி பரவச் செய்பவர்.
அவரே ஞான ஒளி !
சொற்பதங்கடந்த கற்பகத்தரு !
வினைதீர்க்கும் விநாயகர் !
ஓங்காரத்தின் உட்பொருளை ஊட்டி, நாதாந்தமான மெய்ப்பொருளைக்
காட்ட வல்ல சற்குரு!
குருவினுடைய அருட்பெரும் வல்லமை குறித்து, அகத்தியர் அருளிச் செய்த
பாடலைக் காண்போம் :
“ வாசாதே தீட்சை வந்தோர் வாழ்ந்திருந்த ஊரில்
வருகாது வருகாது வினைகள் தானே .”
“ வினையில்லை அவரை நித்தம் தரிசனமே செய்யில்
வேதாந்த சாரத்தே மனமும் தேறும்
இணையில்லை யவர் மதத்தை போற்றி நிற்க
வேண்டியவர் மனது வந்து திரும்பு மட்டும்
வினையில்லை யுண்மையதே தச தீஷை செய்யும்
வேதாந்த சிரோன்மணியே யுன்னைப் பார்த்தால்
வினையில்லை என்னுடைய உடல் பொருளும் ஆவி
விளங்கியதோர் உதகத்தில் தாரையூதே .“
- அகத்தியர் அந்தரங்க தீட்சாவிதி .
பின் வரும் பாடலைக் காணுங்கள் :
“ காட்டிலிருந்தாலும் கனதவஞ்செய்தாலும்
காட்டுங் குருவில்லாமல் - ஞானம்மா
கண்டறிய லாகேதே ” - புண்ணாக்கு சித்தர் .
தேனீயானது, மலரின் உள்ளேயிருக்கும் தேனையருந்தாமல்,
இதழ்களுக்கு வெளியே சுற்றும் வரை,
ரீங்காரம் செய்து கொண்டு பூவைச் சுற்றி சுற்றி வரும்.
ஆனால் பூவுக்குள் நுழைந்த பின்பு,
ஓசை சத்தம் அடங்கித் தேனைக் குடிக்கும்.
மனமும் அதுபோலத் தான் !
அல்லும் பகலும் அலைந்து திரிந்து உழன்று கொண்டேயிருக்கும்.
நெறியுயர்ந்த சற்குரு நேர் வாய்த்த பின்பு, அவரது மின்காந்த சக்தி அலைகள்,
மனதில் அமைதியினை நிரப்பி ஆனந்த பூர்த்தி அளிக்கும்.
இதனையே மனஒடுக்கம் என்பர் பெரியோர்.
“ தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே .”
- திருமந்திரம் .
“ நல்லோரைக் காண்பதுவும் நன்றே “ என்பது முதுமொழி.
குருவின் பார்வை ஒன்றே போதும். அதுவே உன்னதமான நயன தீட்சையாகும்.
“ குரு பார்க்க கோடி புண்ணியம் “ என ஜோதிடம் கூறுவதைக் காண்க.
“ ஆசானு மீசானு மொன்றே யாகும் “ - திருமூலர் ஞானம் .
பெட்டியிதைப் பெறுக என இறைவன் அளிக்கின்றான்;
அது இருக்குமிடத்திற்கு விட்டகுறை அழைக்கின்றது;
அதனை திறக்கும் சாவி குருவின் கையில்;
திறந்திடும் மெய்யறிவு விதியின் கையில்.
அவனருளாலே அவன் தாள் பணிதலே மெய்யறிவு தேடும் மெய்வழிச்சாலை.
மெய்க்கல்வி துணையுடன் மெய்யறிவு பெறவும்,
மெய்யறிவுத் துணையுடன் மெய்ப்பொருள் தேடும் பாதையில்,
இந்த சிந்தனை ஓவியம் ஒரு அறிவிப்புப் பலகை !
கை காட்டும் சின் முத்திரை !
அகர உகர மெய்ப்பொருள் பற்றி சித்தர்கள் கூறியுள்ளதை மீறி,
இம்மியளவு கூட மிகையாகக் கூறிட முயற்சிக்கவில்லை.
மிகுந்த எச்சரிக்கையுடனே இதனைத் துவங்கி முடிக்கிறேன்.
“ அவனுடைய விதியிருந்தால் வருகு மென்றே “ அகத்திய முனிவர் கூறுகிறார்.
இது “ எட்டிரண்டி”னை அறியும் முயற்சியல்ல.
தன்னை அறியும் தவம் ! உண்மையறியும் வேள்வி !
அறிவியல் உளவியல் கலப்படமில்லாத அசல் அக்மார்க் சிந்தனை !
தன்னையறியும் தவம் தழைத்தோங்க வேண்டுமென்பதே இதன் நோக்கம்!
இதனை வாசிப்பவர்களுக்கு விட்டகுறை வாய்த்தால்
சித்தர் பெருமக்களே குருவாய் வந்து,
கலியுகக் கண்ணனாய் அருள் புரிந்து, ஆசி வழங்கிடுவர்.
அதற்கான வாழ்த்துக்கள் !
அனைவரிடத்திலும் ஆத்ம சக்தி ஓங்கி ஒளிரட்டும் !
“ நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய் “ - திருப்பாவை.
“ சொன்னேனறிந்து சுகமாயுலகோர்க்கு
எந்நாளும் வாழ்க வென்றே யான் “ - காகபுசுண்டர்.
சொல் என்றும் மொழி என்றும்
பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலை ஏதும் இல்லை - கண்ணதாசன்.
இவ்வலைப்பூவில் உள்ள தலைப்புகளின் விபரங்கள் அறிய...